Author: சஞ்சயன்
•1:16 PM
தங்கையின் (மழை` ஷ்ரேயா(Shreya) )ப்ளாக் இல் ஒரு இடத்தில் சில நம்மூர் சொற்கள் இருந்தன அவற்றில் ஒனறு தான் தெறித்தல்.

நானும் பயங்கரமா தெறித்துத் திரிந்தவன் தான். டேய் இப்படி தெறித்ததுத் திரியாதடா எண்டு புண்ணியமூர்த்தி சேர் கூட சொல்லியிருக்கிறார். இப்ப கண்டா என்ன சொல்லியிருப்பாரோ தெரியா..

தெறித்தல் என்பது குளப்படி, சுற்றித்திரிதல், சுளட்டுதல், ரௌடித்தனம், அடாவடித்தனம், பெரியவர்களை கனம் பண்ணாமை போன்ற செயல்களின் கலவையே தவிர, வேறொன்றும் இல்லை. இதற்கென்று தனியான அடையாளங்கள் இல்லை.

ஒருவன் குளப்படி என்றால் அவன் தெறிக்கிறான்

மற்றவன் ஒரு தேவதைக்கு கொஞ்சம் அன்பு காட்டினால் இவனும் தெறிக்கிறான் (அன்பை சொடுத்தாலும் தப்பு...ஹய்யோ ஹய்யோ)

இன்னொருத்தன் ஊர்சுற்றித்திரிந்தால் இதையும் தெறிக்கிறான் என்கிறார்கள்.

தெறித்துத் திரிகிறார்கள் என்றால் ஊருக்கு உதவாதவர்களாக பெரிசுகளுக்கு(மட்டும்) தெரிகிறார்கள் என்று அர்த்தம். நட்பு வட்டத்தில் தெறிக்கிறான் என்ற சொல் பாவிக்கப்படுவது குறைவு. தெறித்தல் பல விதத்தில negativ ஆன உருவத்தையே கொடுக்கிறது

ஏன் இந்த தெறித்தல் என்ற பெயர் வந்திருக்கும்? யாரவது தெறிக்காம படிச்சு முட்டாளாயின அறிஞர்கள் இருந்தால் சொல்லுங்கப்பா..

கடைசியா ரெண்டு சந்தேகங்கள்

1. அது சரி, தெறிக்காதவன் என்று யாரும் இருக்கிறார்களா?
2. பெண்களிலும் தெறிப்பவர்கள் உண்டா? (இதில மட்டும் சம உரிமை கேட்க மாட்டார்கள்)

அன்புடன்
சஞசயன்
|
This entry was posted on 1:16 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On October 28, 2009 at 1:50 AM , கானா பிரபா said...

தெறிச்சுப் போனவன் எண்டும் சொல்லுவினம். தறுதலையின் ஒரு வடிவமோ