Author: shangar
•7:44 AM
நாவூறு
ஒருவரைப் பார்த்து ஆசைப்படல் அல்லது ஒருவரின் உயர்ச்சியை பார்த்து பிரமித்தல் என்பவற்றினால் சம்பந்தப்படடவருக்கு ஏதேனும் சுகயீனம் அல்லது அவரின் தொழில் பின்னடைதல் என்பன நடந்தால் நாவூறுபட்டுவிட்டது என்று(கண்படுதல்) கூறுவார்கள்.
உதாரணமாக ஒரு குழந்தையை புதியவர் ஒருவர் பார்த்தார் என்று வைத்துக்கொள்வோம். அன்று அக்குழந்தை தேவையில்லாமல் அழுதுகொண்டிருந்து, அல்லது காய்ச்சல் போன்ற சுகயீனம் ஏற்பட்டால் நாவூறு பட்டுவிட்டது
என்பர்.

ஒரு இரும்புத்துண்டை நெருப்பில் காயவைத்து தண்ணீர் உள்ள செம்பிற்குள் காய வைத்த இரும்பை அதனுள் வைக்கும்போது இரும்பின் சூடு நீரினில் சேரும். பின் இந்த நீரினால் சுகயீனமடைந்தவரைக் கழுவினால் சுகம் வரும் என்று நம்பப்படுகிறது.
அடுத்து காய்ந்த மிளகாயை எடுத்து (3,5) 3 முறை தலையை சுற்றிவிட்டு அதில் 3 தரம் துப்பிவிட வேண்டும். அதைக் கொண்டு போய் கிணற்றில் போடுவர்.. அல்லது அடுப்பில் உள்ள நெருப்பில் போடுவர். மிளகாய் வாசனை வராதுவிடில் நாவூறுதான் என்று உறுதிப்படுத்துவர்.
வேப்பிலை, உப்பு, மிளகு,மிளகாய் என்பவற்றை எடுத்து அந்த நபரின் மேல் தடவி தலையையும் சுற்றி பன்னாடையில் அவற்றை வைத்து எரித்து அச்சாம்பலை நெற்றியில் பொட்டாக இட்டுவிடுவர். அப்போது நாவூறு எனின் மிளகாய் எரிந்த வாசனை வராது. இவற்றை நாவூறு கழித்தல் என்று கூறுவர்.

நாவூறு வராமல் இருக்க வசம்பை சுட்டு அதன் சாம்பலை குழந்தையின் உள்ளங்காலில்
போட்டுவிட்டு அக் குழந்தையை புதிய இடத்திற்கு கொண்டு போனாலும் நாவூறு ஏற்படாது என்று நம்பப்படுகிறது.
நாக்கிலே கறுப்பு உள்ளோரை கருநாக்குகாரர் என்றும் அவர் பார்த்தால் நாவூறு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

வயதுக்கு வந்த பெண்பிள்ளையை அழகுபடுத்தி ஆராத்தி எடுத்தபின் தேசிக்காய் , வேப்பிலை கொண்டு ஆராத்தி சுற்றி கழிப்பதும் நாவூறு அல்லது கண்படுதல் என்பவற்றிற்காகத்தான் எனலாம்.

சகுனம்
ஒருவர் வீட்டில் இருந்து வெளிக்கிடும்போது யாரேனும் எதிர்படுபவர் தனக்கு சரியில்
லை என்று நினைத்தால் சகுனம் சரியில்லை எனப்படும். ஒருசிலருக்கு அப்படி எதிர்படுபவரைக் கண்டதும் போக முதலே தான் போகும் காரியம் சரிவராது என்று மனதில் பட்டுவிடும்.

உதாரணத்திற்கு பூனை குறுக்கே போதல், விளக்குமாற்றுடன் ஒருவர் எதிர்படல்,
வெறும் வாளி, பெட்டியுடன் எதிர்படல் , தலைவிரித்துக்கொண்டு எதிர்படல்,(தலைவிரித்து திரிவது பஷன் (fashion) ஆன பி
ன்னருமா.. ) அழுது கொண்டு வருதல் மற்றும் இன்னோரன்னவை அடக்கம். இதற்காக வாசலில் தண்ணீர் நிரப்பிய வாளியில் பூக்களைப் போட்டு வைத்துவிட்டு அதைப்பார்த்துக் கொண்டு போனால் பின்பு என்ன வந்தாலும் கவலைப்படத்தேவை இல்லை என்று நினைக்கின்றனர்.

இவையெல்லாம் அவரவர் நம்பிக்கை தான். சில சில வித்தியாசங்களுடன் பெரும்பாலானவை தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படுகிறவையே.. இல்லையா?