Author: கானா பிரபா
•3:33 AM
நந்தனாவின் குடும்பம் மிகவும் கட்டுப்பாடானது. அவளின் தகப்பனார் பண்டிதர் பரமசிவம் வெள்ளை வேட்டி, அதற்குத் தோதாற்போல முழுக்கைச் சட்டை அதுவும் நாஷனல் என்று அழைக்கப்படும் வெண் நிறத்தது. கூடவே சால்வை என்று கோலம் கொண்டிருப்பார். பரமசிவத்தாரின் மனைவி காமாட்சியும் கணவனுக்குத் தோதான துணைவியாக இருப்பவர்.

திடீரென்று ஒரு நாள் நந்தனா வழக்கத்துக்கு மாறாக அதீத நவநாகரீகம் கொண்ட உடுப்பை அணிந்து தன் தாய் காமாட்சிக்கு முன் வந்து நின்றாள்.
"ஐயோ பண்டிதர் பரமசிவத்தாற்றை மேள் இப்படி அரைகுறையா வருகுதே எண்டு சனம் நாக்கு வழைக்கப் போகுது " என்று காமாட்சி பதறினார்.

மேலே சொன்ன கற்பனைச் சம்பவத்தில் மேற்கோள் இடப்பட்ட "நாக்கு வழைத்தல்" என்பது ஈழத்துப் பேச்சு வழக்கில் இன்னொரு சொல்லாகப் புழங்குகின்றது.

ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக இன்னொருவர் பேசுவதைப் புறணி பேசுதல் என்போம். ஆனால் இங்கே நாக்கு வழைத்தல் என்பது புறணி பேசுவது என்பதற்கு சற்று வேறுபாடாக நக்கல் பண்ணுவார்கள் என்பதற்கு மிக நெருங்கிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது.

எனவே நாக்கு வழைத்தல் என்பது ஒருவரது குணாம்சம், நடை உடை பாவனையில் ஏதேனும் குறையைக் கண்டு பிடித்து இன்னொருவர் அல்லது ஊரார் எள்ளி நகையாடுவது என அமைந்திருக்கும்.

"நாக்கு வழைத்தல்" என்பதை உங்கள் ஊரில் எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என அறிய ஆவல்.
This entry was posted on 3:33 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On October 26, 2009 at 4:26 AM , Abiman said...

Sorry for English. I think that is "Naakku valaiththal" not " Naakku valiththal".

 
On October 26, 2009 at 4:31 AM , கானா பிரபா said...

வணக்கம் அபிமான்

நீங்கள் சொல்வதே சரி, நாக்கு வழைத்தல் என்பதே பயன்பாட்டில் உள்ள சொல், திருத்த உதவியமைக்கு மிக்க நன்றி

 
On October 26, 2009 at 1:53 PM , Unknown said...

பிரபா அண்ணா... நாக்கு வளிக்கிறது என்றும் இதைச் சொல்லிறவை எண்டு எனக்கு ஞாபகம்

 
On October 27, 2009 at 2:38 AM , கானா பிரபா said...

வணக்கம் கிருத்திகன்

நாக்கு வழிக்கப் போகினம் என்றும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். நாக்கு வழைத்தல் என்றால் ஏளனமாக நாக்கை வழைத்துப் பேசுவதால் வந்ததோ என்னவோ ;)