Author: ந.குணபாலன்
•12:26 PM

  மட்டக்களப்புச் சைவர்களின் மரணச்சடங்குகள்!

அண்மையில் மறைந்த பாடகர் அமரர் திரு பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் தகனம் செய்யப்படாமல் மண்ணில் தாழ்க்கப்பட்டது பலரும் அறிந்தது. பலரை வியப்புக்கும் உள்ளாக்கியது. ஓ இப்பிடியுமோ? இந்துக்கள் தகனம் செய்வது தானே முறை? என்ற கேள்விகள் எழுந்தன. எங்களில் பலரும் சிலபல விளக்கம் இல்லாமல் கிணற்றுத்தவளைகளாகவே வாழப்பழகி விட்டோம்.

இந்துக்கள் இலங்கையில் வாழுஞ் சைவர்களிடமே இடத்துக்கிடம் வேறுபடும் மரணச் சடங்குகள் உள்ளன. யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த எனக்கும் ஒரு மட்டக்களப்புப் பிரதேச நண்பரின் ஊடாக இந்த விவரங்கள் தெரியவந்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அதுவரை நான் அறிந்தது, சைவமுறைப்படி 12 வயசுக்கு உட்பட்ட பிள்ளைகள் இறந்தபின் மண்ணில் தாழ்க்கப்படுவதே. ஆனால் சாமியார்களை மண்ணிலே கிடங்கு வெட்டி இருந்தவாக்கில் வைத்து விளைவு கர்ப்பூரம் விபூதி நிரப்பி தாழ்த்து சமாதியிருக்க வைப்பதாக எங்கேயோ எப்போதோ அறிந்திருக்கிறேன். இதனைக் “காரையிருத்தல்” என்றும் சொல்வதாம். இணுவிலுடன் இந்தக் காரைக்கால் என்ற சொல்லைத் தொடர்புபடுத்தி ஏதோ ஒரு முறை வாசித்ததாக ஒரு ஞாவகம். இணுவில்காரர் இன்னும் கூடுதல் விளக்கம் அறிந்திருப்பார்கள்.

வீரகேசரியின் வாரமலரில் எனது 30 வரிய காலத்துக்கு முந்திய சீவியத்தில் வாசித்த சிறுகதை ஒன்று மலையகச் சைவத்தமிழரும் இறந்தவர்களைத் தாழ்ப்பதாக ஒரு கருத்தை எனக்குள் ஏற்றிவிட்டது. அதுபற்றிய சரிபிழை இதுவரை நான் ஆராயவில்லை.

இங்கே மட்டக்களப்புப் பிரதேசத்தில் பின்பற்றப்படும் மரணச்சடங்குகள் பற்றி நான் கேட்டறிந்ததை தருகின்றேன்.

ஒருவரின் மரணத்தறுவாயில் போகும் சீவன் புண்ணியத்துடன் போகவேண்டும் என்று “வைகுந்த அம்மானை” என்ற பொத்தகம் படிக்கப்படும். மாபாரத நாயகர்களான பஞ்சபாண்டவரும், திரௌபதையும் விண்ணுலகு மேவியதைப் பற்றிய ஒரு பொத்தகம் இது.

ஒருவர் இறந்ததும் சவத்தை உடனே குளிப்பாட்டி, உடுப்பாட்டி விடுவார்கள். 

இறந்தவரின் குடிக்குரிய கட்டாடி(வண்ணார்), பரியாரி(நாவிதர்), மற்றும் பிற ஊர்களில் உள்ள உறவினர்களுக்கு விசளம்வியளம் சொல்ல ஆள் அனுப்புவார்கள்.

சவத்தை வீட்டின் மண்டபத்தில் சாமூலை எனப்படும் தெற்குத்திக்காக ஒரு மூலைப் 

பாடாகத் தலையிருக்க வளர்த்துவார்கள்தலைமாட்டிலும் கால்மாட்டிலும் 

குத்துவிளக்குகள் கொளுத்தி வைக்கப்படும்.

 






சவம் எடுக்கும் நாளன்று கூரைமுடி எனப்படும் நிறைகுடங்கள் ஒற்றைத்தானத்தில் 

மண்டபவாசலின் கூரைவிளிம்பில் வைத்து நேரே கீழே வாசலின் இருபுறமும் நெல்லைக்கொட்டி தண்ணீர் அள்ளும் பெரியகுடங்களில் கும்பம் வைக்கப்படும்.


பறைமுழங்குபவர்களை மகிழுந்தில் கூட்டிவந்து அவர்களுக்கு கோடிவேட்டியும்

பறைக்குச் சுற்றிக்கட்ட வெள்ளைநிற கோடித்துணியும் கொடுக்கப்படும் பறைக்

குழுவிலே ஒரு பெரியபறை(யாழ்ப்பாணத்துப் பறையைவிடச் சிறியதாம்), ஒரு 

கொட்டுப்பறைஒரு குழல் இருக்கும். செத்தவீட்டிலே குழலுடன் பறை முழங்கும். 


இறந்தவரின் பாதங்களுக்கு அவரைவிட வயசில் இளைய பெண் உறவினர்கள் 

மஞ்சள்நீர் தெளித்துப் பூவைத்து வணங்குவார்கள்சவம் வீடுவிட்டு வெளிக்கிட்டதும் 

கூரைமுடி அகற்றப்படும்


கடமை செய்யும் மகன் தலைக்கோடு (நீருள்ள மண்குடம்தலையில் தாங்கி ஒரு 

கொள்ளி விறகுத் துண்டுடன் காவிச்செல்ல சவம் போகும்அப்போது நாற்சந்திகளில் 

பறைக்குழுவினர் பறையடித்து குழலூதி ஆடுவார்கள்நிலபாவாடை விரிப்பதும் உண்டு

சவக்காலையில் ஏற்கெனவே மடு தோண்டியிருக்கும்பறைமேளக்காரரிடம் அந்த

மடுவுக்குரிய நிலத்துண்டை வாங்கும் பாவனையில் ஏலம் போட்டு ஒரு தொகை 

பறைமேளக்காரருக்கு கொடுக்கப்படும்


மடுவில் பிரேதம் இறக்கப்பட முன்னம் வாய்க்கரிசி போடுவார்கள்வாய்க்கரிசி வீட்டில்

போடுவதில்லைபெட்டியை மூடி மடுவில் இறக்கி உரிமைக்காரர் மண்போட்டு மடுவை 

மூடி நிரவுவர்பின்கடமை செய்யும் மகன் மடுவை மும்முறை இடப்பக்கமாக சுற்றிவரக் 

குடத்தில் துளையிட்டு மூன்றாம்சுற்றுமுடிவில் தோளின் பின்புறமாக குடத்தை விழுத்தி உடைத்துக் கொள்ளியையும் கீழே போட்ட பின் திரும்பிப் பாராமல் இடுகாட்டை 

விட்டு வெளியேறுவார்.


வீடு வந்தவுடன் வீட்டு வாசலில் ஒரு கும்பம் வைத்து கர்ப்பூரம் கொளுத்திய பின் 

தோய்ந்து குளித்து மாற்றுடை உடுத்தி உணவு அருந்துவர்மடு தோண்டப் பயன்

படுத்திய மண்வெட்டிகத்தி முதலியவை கழுவப்பட்டு மண்டபத்தின் உள்ளே வைக்கப்

பட்டிருக்கும் குத்துவிளக்கின் அருகே வைக்கப்படும்செக்கலானதும் குத்துவிளக்கினருகே வைகுந்த அம்மானை படிக்கப்படும்எட்டுக்கல்லை (எட்டுச்சிலவு)வரை இதைப்

படிப்பார்கள்


வைகுந்த அம்மானை படிக்கும்போது முற்றத்திலே ஒரு பக்கமாக ஒரு பெரிய 

கட்டையைக் கொளுத்தி தீநா (தீ+நாவளர்ப்பார்கள்இந்தத் தீநா எட்டுவரை 

எரிக்கப்படும்சவம் தாழ்த்த பின் மூன்றாம்நாள் அவ்விடம் சென்று பால் தெளிப்பார்கள்

அன்றைக்கு வீட்டு முற்றத்திலே வெள்ளை வேட்டியால் மறைப்பு கட்டிப் புக்கை 

பொங்கி படைக்கப்படும்இதனை வயசானவர்களே செய்வர். அதை முக்கியமாக  சின்னப்பிள்ளைகள் பார்க்கக்கூடாது. அந்த புக்கையை அந்தவீட்டு வளவை விட்டு 

வெளியே கொண்டு போவதில்லை


எட்டுக்கல்லைப் படைப்பு செக்கல்நேரம் செய்யப்படும்

31ம் நாள் சடங்கு  31அமுது எனப்படும்.

அதற்கு முதல்நாளான 30ம்நாள் செக்கலிலும் கல்லைப் படையல் இடம்பெறும்.

அது முடிய இரவோடிரவாக கழுவி மெழுகி மைக்காநாள் 31அமுதிற்கு மரக்கறி உணவு மட்டும் படைக்கப்படும்


அதற்குரிய வழிபாடு செய்ய ஐயன் எனப்படுபவர் வருவார்பிராமணரில்லை

பூணூலிட்டவர் இல்லைகோயில் பூசகருமில்லைஇவர் ஒரு சங்கும் சேமக்கலமும் 

கொண்டு வந்து அவைகளை இசைத்து தமிழில் வழிபாட்டுப்பாடல்கள் பாடி வழிபாடு 

செய்வார்வழிபாடு  முடிந்து அவர் தன்வீடு சென்றதும் அவர் பின்னாலே அவருக்குரிய 

பச்சைத்தானம் எனப்படும் சமைக்காத பச்சைக்காய்கறி அரிசி என்பனவும் சமைத்த 

உணவும் தனித்தனி ஓலைப்பெட்டிகளில்  வைத்துவெள்ளைத்துணியால் கட்டி அவர் 

வீட்டிற்குக் கொண்டுபோய்க் கொடுக்கப்படும்.


இவ்வண்ணமே பரியாரிகட்டாடிமார் வீட்டிற்கும் இருவகைத் தானங்கள் கொண்டுபோய்க் கொடுக்கப்படும்அவர்கள் 31அமுது நாளுக்கு வருவதில்லை. 31அமுது நாளிலே செக்கலில் வைகுந்த அம்மானையில் வாழி (வாழிப்படலம்) படிக்கப்படும்.

ஆண்டுத் திவசத்தை ஆண்டமுது என்பர். அநேகர் புரட்டாசி மாச மாளய காலத்தில் மாளயப் படையல் வழிபாடு செய்வர். அந்த வழிபாட்டையும்  ஐயனே வந்து நடத்துவார்.


தகவலும் படமும் : ராசா பஞ்சாட்சரம்

இலங்கையில் பிறந்து வளர்ந்த இடங்கள் : மண்டூர், குருமண்வெளி






|
This entry was posted on 12:26 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: