Author: தமிழ் மதுரம்
•2:38 AM
இப்ப எல்லோருக்கும் வேம்படிக் குட்டிகள் கண்ணுக்கு முன்னுக்கு வந்து போவீனம் என்று நினைக்கிறேன். எங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பெண்கள் பாடசாலைகளுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த வேம்படி மகளிர் கல்லூரி. எங்கள் பாடசாலையின் சகோதரப் பாடசாலை அல்லது சகோதரிப் பாடசாலையும் இது தான். பதிவின் தலைப்பைப் பார்த்ததும் நான் ஏதோ என் குருவியைப் பற்றிப் புலம்பப் போறேன் என்று நினைத்தால் அது தவறு பாருங்கோ.



இந்தப் பதிவு ஈழத்தின் ஒரு சில ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பாடலை உள்ளடக்கிய பதிவு. பாடலைப் பாடியவர் ஏ.ஈ.மனோகரன் என்று நினைக்கிறேன். உறுதியாகக் கூறமுடியவில்லை. இனிப் பாடலுக்குள் செல்வோமா...




குரல்: ‘என்ரை மனுசி சண்டை போட்டால் சாரயம் கேட்குதடா. அந்தச் சாரயம் உள்ள போனால் பைலா கேட்குதடா....


குரல் 02: ஊத்தடா......மச்சான்.. சுதியேத்தினது போதும்டா..டேய்.... பாடடா....தோடா...


பாடல்:
வேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா
தாவடியிலை என் மனசை கொள்ளை அடிச்சவா
சில்லாலை கிழக்காலை தையல் படிச்சவா-ஒரு
சொல்லாலை தெல்லிப்பளை லூசர் அடிச்சவா

‘’ஏ...கந்சாமி கானா... கேளு கரவெட்டி மைனா’
நாவாந்துறை மீனு என்கிட்ட ஆட்டாதே வாலு!
(வேம்படியிலை என் குருவி...)



சுன்னாகம் சந்தைக்கு நான் அன்றாடம் போகையிலே
பன்னாகம் பஸ்ஸுக்குள்ளே பார்த்துச் சிரிச்சவளே
வட்டுக்கோட்டை மேஸ்திரியார் கட்டினது கந்தர்மடம்
காங்கேசன் சீமெந்திலை கட்டினேண்ட்டி காதல் மடம்
சுண்டுக்குளி வந்ததுமே நெஞ்சுக்குளி நோவுதடி..
நாவற்குழி அண்டங் காகம் நாவறண்டு பாடுதடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)



உண்ணாமல் உறங்காமல் உடுப்பிட்டி பஸ்ஸெடுத்து
அச்சுவேலி, ஆவரங்கால் புத்தூரில் நான் தவிக்க
இணுவில் மாம்பழத்தை, கோண்டாவில் கொய்யாவை
கொக்குவில் அணில் பார்த்துக் கொட்டாவி விட்ட கதை
நல்லூர் கந்தனுக்கு நாநூறு பழத் தேங்காய்
கீரிமலை வேந்தனுக்கு கேணி ஏறித் தீர்த்தம் வைத்தேன்
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)


அரியாலை ஊருக்குள்ளே மரியாதை உள்ளவனை
சரசாலைத் தவறணையில் குடிகாரன் ஆக்கிவிட்டாய்
கொட்டடியில் கோட்டை வைச்ச வெள்ளையனைக் கலைச்சது போல்
நாயன்மார்க்கட்டில் வைச்சு நாயே என்று கலைச்சு விட்டாய்
நவாலிப் புலவனுக்கு மீசாலைத் தாடியடி
கிளாலிக் கடலுக்குள்ளை பலாலி ஆமியடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)




இந்தப் பாடலைக் கேட்பதற்கு உங்களிடம் பிளாஷ் பிளேயர் இருக்க வேண்டும். என்ன பாட்டுக் கேட்க எல்லோரும் றெடியோ????



Get this widget | Track details | eSnips Social DNA
|
This entry was posted on 2:38 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On October 15, 2009 at 3:03 AM , Vel Tharma said...

It is excellent..

 
On October 15, 2009 at 3:20 AM , கானா பிரபா said...

பெரும்பாலான ஊர்கள் வந்திட்டுதே ;)

 
On October 15, 2009 at 3:04 PM , Unknown said...

ஊர்ப்பேர் வாறதாலையோ என்னவோ... சூப்பர் பாட்டு. கிட்டத்தட்ட 25 தரம் திரும்பத்திரும்பக் கேட்டாச்சு

 
On October 15, 2009 at 6:47 PM , கிடுகுவேலி said...

எல்லா சிட்டுக்களும் கண்முன்னே வந்து போயினர்..!

 
On October 15, 2009 at 10:22 PM , Anonymous said...

Supper!!!!!!!!!!!!!!