•5:17 AM
பாடசாலை நினைவுகள் எவ்வளவு பசுமையானதோ அதேபோல் ரியூசன் நினைவுகளும் அதே அளவு பசுமையானது. சினேகிதி எழுதிய "ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள் " ஒரு 8 ஆம் அல்லது 9 ஆம் வகுப்புடன் நின்றுவிட்டதுபோல் தெரிகிறது. ஆகவே உயர்தரத்தில் நாங்கள் செய்த குழப்பங்களும் பசுமையான நினைவுகளும் கொட்டில் காலத்து நினைவுகளாக, கொட்டில் என்றவுடன் கள்ளுக்கொட்டிலை நினைக்கவேண்டாம்.
உயர்தரம் படிக்கப்போகின்றோம் என்றவுடன் முதலில் எல்லோரும் கேட்கும் விடயம் எங்கையப்பு ரியூசன் போகப்போறாய்? மட்ஸ் என்றால் வெக்டரிடம் போ அவர் தான் சரியான ஆள் இது ஒருவர், இன்னொருவரோ "இல்லை இல்லை ஆரம்பத்தில் வெக்டரிடம் பார்க்க நல்லையா மாஸ்டரிடம் போ, அவர் தான் அடிப்படையில் இருந்து திறமாகச் சொல்லித் தருவார்" என வகுப்புகள் தொடங்கமுன்னரே குளப்பத் தொடங்கிவிடுவினம்.
ஆனால் அந்தக் காலத்தில் நாம் ஆற்றை பேச்சைக் கேட்டோம். அதனால் கூட்டாளிப் பொடியள் போற ரியூசன் தான் எனக்கும். சாதாரண தரம் வரை இன்னொரு ரியூசனில் படித்துவிட்டு வதிரியிலுள்ள "பீகொன்" என்ற தியேட்டருக்கு எங்கள் வானரப் படை இறங்கியது.
அங்கே ஆரம்பத்தில் புதிய ஆசிரியர்கள் புதிய இடம் என்பதால் கொஞ்சம் அமைதியாகவே இருந்தோம். என்னுடைய பாடசாலை நண்பர்கள், ஏனைய பாடசாலையில் படித்து முன்னைய ரியூசன் நண்பர்கள், அத்துடன் பல புதிய முகங்கள், பருத்தித்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை என பல இடங்களில் இருந்தும் வந்தவர்கள் தான் பலர்.
பெண்வரிசையில் பெண்கள் அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் என முதல் சில நாட்கள் அனைவரும் இருந்தோம். நாம் செய்த அட்டகாசங்களில் எங்களை முன்னுக்கு விட்டுவிட்டு பெண்களை பின்னால் இருத்திவிட்டார்கள். இந்தக் கொடுமை உயர்தரம் முடியும்வரை தொடர்ந்தது.
பெளதிகவியல் ஆசிரியர் திரு.வர்ணம் அவர்கள், சந்தேகம் எதுவும் இருந்தால் எழும்பிக்கேட்க வெட்கப்பட்டால் துண்டில் எழுதிக்கொடுங்கோ என்றார். இதுதான் சாட்டு என நம்மடை வாரணப் படை ஒருமுறை விஜய் படமான பூவே உனக்காகப் பாடலான "ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பாடலில் வரும் வரியான "காதலோடு வேதங்கள் 5 என்னுங்கள்" என்ற வரி சரியா நாங்கள் படிக்கின்ற காலத்தில் வேதங்கள் என்றால் 4 எனத் தான் படித்தோம் என எழுதிக்கொடுத்தால், மனிசன் யார் எழுதியது என்பதை அந்த துண்டை வந்தவழியே அனுப்பி கண்டுபிடித்து ஒரு கிழிதான். பெரும்பாலும் மாணவர்களை அவர் ஏசுவதில்லை.
இரசாயனவியல் ஆசிரியர் அன்பாக தில்லை என அழைக்கப்படும் திரு. தில்லைநாதன் ஆசிரியர், இவர் வல்லைவெளி தாண்டி வருபவர் என்பதால் எப்படியும் கொஞ்சம் லேட்டாகத் தான் வருவார். இதனால் இவர் பாடம் வரும்வரை எங்கள் சில்மிசங்களும் கொழுவல்களும் நடக்கும். எங்கடை வகுப்பில் சில பெண் பிள்ளைகள் தில்லை சேரின் பாடத்திற்க்கு இருப்பதில்லை அவர்கள் இன்னொரு ஆசிரியரிடம் இரசாயனவியல் படிக்கச் செல்பவர்கள். ஒருநாள் தில்லை சேர் வழக்குத்துக்கு மாறாக நேரத்துக்கு வந்துவிட்டார். முதல் பாடம் முடிய இவர்கள் கொட்டிலை விட்டு வெளியே செல்ல நாங்கள் சும்மா இருக்காமல் அவர்களின் பட்டப் பெயர்களைச் சொல்லிக் கத்த அதிலை ஒருத்தி எங்களுக்கு அடிப்பன் என கைகாட்டியதும் அதனைத் தில்லை சேர் பார்த்ததையும் நாங்கள் பார்க்கவில்லை.
அண்டைக்கு முழுநேரமும் எங்களுக்கு இரசாயனவியலுக்குப் பதிலாக எச்சும் பெண்களுடன் எப்படி நடக்கவேண்டும் என தில்லை சேர் பாடம் எடுத்தார். அப்படி ஒரு பேச்சு ஒருநாளும் நாங்கள் எந்த ஆசிரியரிடமும் கேட்கவில்லை. இதில் எனன் விசேடம் என்றால் அண்டைக்கு சகல பெண்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆண்களை மட்டும் வைத்துக்கொண்டுதான் அர்ச்சனை நடந்தது.
பிறகு பேப்பர் கிளாஸ் காலங்களில் எங்கடை சங்கரலிங்கம்(ஆறரை அடி உயர மனிதர்) அண்ணையின் ரியூசனில் பின்னேரம் 6 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணிக்குத் தான் வகுப்பு முடியும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து வகுப்புக்கு வருகின்ற பெண்களை நாங்கள் தான் மெய்ப்பாதுகாப்பாளர்கள் போல் அவர்களின் வீடுவரை கொண்டு சென்று விடுவது. இத்தனைக்கும் அதுகள் எங்களுடன் கதையாதுகள், முன்னால் செல்வார்கள் நாங்கள் பின்னால் செல்லவேண்டும், ஏதாவது கதை கேட்டால் யாரும் பார்த்தால் பிரச்சனை என மெதுவாகச் சொல்வார்கள். ஒருக்கால் இருட்டிற்க்குள் இரும்பு மதவடி தோட்டத்திற்க்கை விழுந்து, நாய் திரத்தி என பல அனுபவங்கள் இருக்கின்றன. இப்போ அந்த நண்பிகள் குடும்பமாக வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கின்றார்கள்.
பிறகு நெல்லியடி மொடேர்னில் பெளதிகவியல் பேப்பர் கிளாஸ் கணேசன் ஆசிரியரிடமும் வெக்டர் ஆசிரியரிடமும் எங்களுக்கு முன்னைய பட்சுடன் போனோம். கணேசன் சேர் வகுப்பிலை யாரும் நித்திரை கொண்டால் உடனே அவரைத் தட்டிக்கேட்பார் "யார் கனவிலை வந்தது என", ஆண்கள் என்றால் மீனாவோ ரம்பாவோ எனக்கேட்பார், பெண்கள் என்றால் "ரஜனியோ, கமலோ" எனக் கேட்பார், ஒருக்கால் இப்படித்தான் ஒரு பெடியனைக் கேட்க அவன் "மீனாவும் ரம்பாவும் அல்ல, பக்கத்து லொஜிக் வகுப்பில் இருக்கும் சியாமளாதான் கனவில் வந்தாள்" என்றான் வகுப்பே சிரிப்புத் தான்(சேர் உட்பட).
உப்பிடி நிறையக் கதைகள் இருக்கின்றது, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனைய கதைகள் மீண்டும் வரும்.
உயர்தரம் படிக்கப்போகின்றோம் என்றவுடன் முதலில் எல்லோரும் கேட்கும் விடயம் எங்கையப்பு ரியூசன் போகப்போறாய்? மட்ஸ் என்றால் வெக்டரிடம் போ அவர் தான் சரியான ஆள் இது ஒருவர், இன்னொருவரோ "இல்லை இல்லை ஆரம்பத்தில் வெக்டரிடம் பார்க்க நல்லையா மாஸ்டரிடம் போ, அவர் தான் அடிப்படையில் இருந்து திறமாகச் சொல்லித் தருவார்" என வகுப்புகள் தொடங்கமுன்னரே குளப்பத் தொடங்கிவிடுவினம்.
ஆனால் அந்தக் காலத்தில் நாம் ஆற்றை பேச்சைக் கேட்டோம். அதனால் கூட்டாளிப் பொடியள் போற ரியூசன் தான் எனக்கும். சாதாரண தரம் வரை இன்னொரு ரியூசனில் படித்துவிட்டு வதிரியிலுள்ள "பீகொன்" என்ற தியேட்டருக்கு எங்கள் வானரப் படை இறங்கியது.
அங்கே ஆரம்பத்தில் புதிய ஆசிரியர்கள் புதிய இடம் என்பதால் கொஞ்சம் அமைதியாகவே இருந்தோம். என்னுடைய பாடசாலை நண்பர்கள், ஏனைய பாடசாலையில் படித்து முன்னைய ரியூசன் நண்பர்கள், அத்துடன் பல புதிய முகங்கள், பருத்தித்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை என பல இடங்களில் இருந்தும் வந்தவர்கள் தான் பலர்.
பெண்வரிசையில் பெண்கள் அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் என முதல் சில நாட்கள் அனைவரும் இருந்தோம். நாம் செய்த அட்டகாசங்களில் எங்களை முன்னுக்கு விட்டுவிட்டு பெண்களை பின்னால் இருத்திவிட்டார்கள். இந்தக் கொடுமை உயர்தரம் முடியும்வரை தொடர்ந்தது.
பெளதிகவியல் ஆசிரியர் திரு.வர்ணம் அவர்கள், சந்தேகம் எதுவும் இருந்தால் எழும்பிக்கேட்க வெட்கப்பட்டால் துண்டில் எழுதிக்கொடுங்கோ என்றார். இதுதான் சாட்டு என நம்மடை வாரணப் படை ஒருமுறை விஜய் படமான பூவே உனக்காகப் பாடலான "ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பாடலில் வரும் வரியான "காதலோடு வேதங்கள் 5 என்னுங்கள்" என்ற வரி சரியா நாங்கள் படிக்கின்ற காலத்தில் வேதங்கள் என்றால் 4 எனத் தான் படித்தோம் என எழுதிக்கொடுத்தால், மனிசன் யார் எழுதியது என்பதை அந்த துண்டை வந்தவழியே அனுப்பி கண்டுபிடித்து ஒரு கிழிதான். பெரும்பாலும் மாணவர்களை அவர் ஏசுவதில்லை.
இரசாயனவியல் ஆசிரியர் அன்பாக தில்லை என அழைக்கப்படும் திரு. தில்லைநாதன் ஆசிரியர், இவர் வல்லைவெளி தாண்டி வருபவர் என்பதால் எப்படியும் கொஞ்சம் லேட்டாகத் தான் வருவார். இதனால் இவர் பாடம் வரும்வரை எங்கள் சில்மிசங்களும் கொழுவல்களும் நடக்கும். எங்கடை வகுப்பில் சில பெண் பிள்ளைகள் தில்லை சேரின் பாடத்திற்க்கு இருப்பதில்லை அவர்கள் இன்னொரு ஆசிரியரிடம் இரசாயனவியல் படிக்கச் செல்பவர்கள். ஒருநாள் தில்லை சேர் வழக்குத்துக்கு மாறாக நேரத்துக்கு வந்துவிட்டார். முதல் பாடம் முடிய இவர்கள் கொட்டிலை விட்டு வெளியே செல்ல நாங்கள் சும்மா இருக்காமல் அவர்களின் பட்டப் பெயர்களைச் சொல்லிக் கத்த அதிலை ஒருத்தி எங்களுக்கு அடிப்பன் என கைகாட்டியதும் அதனைத் தில்லை சேர் பார்த்ததையும் நாங்கள் பார்க்கவில்லை.
அண்டைக்கு முழுநேரமும் எங்களுக்கு இரசாயனவியலுக்குப் பதிலாக எச்சும் பெண்களுடன் எப்படி நடக்கவேண்டும் என தில்லை சேர் பாடம் எடுத்தார். அப்படி ஒரு பேச்சு ஒருநாளும் நாங்கள் எந்த ஆசிரியரிடமும் கேட்கவில்லை. இதில் எனன் விசேடம் என்றால் அண்டைக்கு சகல பெண்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆண்களை மட்டும் வைத்துக்கொண்டுதான் அர்ச்சனை நடந்தது.
பிறகு பேப்பர் கிளாஸ் காலங்களில் எங்கடை சங்கரலிங்கம்(ஆறரை அடி உயர மனிதர்) அண்ணையின் ரியூசனில் பின்னேரம் 6 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணிக்குத் தான் வகுப்பு முடியும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து வகுப்புக்கு வருகின்ற பெண்களை நாங்கள் தான் மெய்ப்பாதுகாப்பாளர்கள் போல் அவர்களின் வீடுவரை கொண்டு சென்று விடுவது. இத்தனைக்கும் அதுகள் எங்களுடன் கதையாதுகள், முன்னால் செல்வார்கள் நாங்கள் பின்னால் செல்லவேண்டும், ஏதாவது கதை கேட்டால் யாரும் பார்த்தால் பிரச்சனை என மெதுவாகச் சொல்வார்கள். ஒருக்கால் இருட்டிற்க்குள் இரும்பு மதவடி தோட்டத்திற்க்கை விழுந்து, நாய் திரத்தி என பல அனுபவங்கள் இருக்கின்றன. இப்போ அந்த நண்பிகள் குடும்பமாக வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கின்றார்கள்.
பிறகு நெல்லியடி மொடேர்னில் பெளதிகவியல் பேப்பர் கிளாஸ் கணேசன் ஆசிரியரிடமும் வெக்டர் ஆசிரியரிடமும் எங்களுக்கு முன்னைய பட்சுடன் போனோம். கணேசன் சேர் வகுப்பிலை யாரும் நித்திரை கொண்டால் உடனே அவரைத் தட்டிக்கேட்பார் "யார் கனவிலை வந்தது என", ஆண்கள் என்றால் மீனாவோ ரம்பாவோ எனக்கேட்பார், பெண்கள் என்றால் "ரஜனியோ, கமலோ" எனக் கேட்பார், ஒருக்கால் இப்படித்தான் ஒரு பெடியனைக் கேட்க அவன் "மீனாவும் ரம்பாவும் அல்ல, பக்கத்து லொஜிக் வகுப்பில் இருக்கும் சியாமளாதான் கனவில் வந்தாள்" என்றான் வகுப்பே சிரிப்புத் தான்(சேர் உட்பட).
உப்பிடி நிறையக் கதைகள் இருக்கின்றது, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனைய கதைகள் மீண்டும் வரும்.