•9:57 AM
மைம்மலுக்கை சுருட்டும் கையுமாக இருந்த சண்முகம் கிழவன் தெருவாலை போன ஒரு பெட்டையை மட்டுக்கட்டமுடியாமல் "உதார் பிள்ளை " என அவளைக்கூப்பிட்டார்.
"எணே அப்பு அது நான் மணியத்தாற்றை மூத்தது" என பதிலளித்தாள் மணியம் மாஸ்டர்ரை மூத்த பெட்டை மணிமொழி.
"எங்கே பிள்ளை கலாதியாக வெளிக்கிட்டுக்கொண்டுபோறாய்" கிழவன்
"என்ரை கூட்டாளிப் பிள்ளை ஒருத்திக்கு இண்டைக்கு பேர்த்டே அங்கேதான் போறன்" என்ற படி மணிமொழி சைக்கிளை உதையத்தொடங்கினாள்.
பார்ட்டியிலை மணிமொழியின் நண்பின் தாயார் அனைவரையும் நன்றாக உபசரித்தார். எல்லோருக்கும் இன்னொரு தரம் அரியதரம் சாப்பிடக்கொடுத்தார். "பிள்ளையள் இந்த அரியதரத்தை மிச்சம் விடாமல் சாப்பிடுங்கோ, இல்லையென்றால் சக்குப் பிடிச்சுப்போம்" எனக் கூறினார்.
மணிமொழி பக்கத்திலை இருந்த தன் நண்பி தர்சியைப் பார்த்து "தர்சி அங்காலை கதவுக்குப் பக்கத்திலை நிற்கிற பொடியன் என்னைப் பார்த்து இளிக்கிறான், "உவன் என்ரை கூட்டாளி ஒருத்திக்கு டிமிக்கி கொடுத்தவன்" அவனுக்கு பெரிய கெப்பர் பொடிப்பிள்ளை ஒருநாளைக்கு தனிய அம்பிடட்டும் அண்டைக்கிருக்கு உவருக்கு" என்றாள்
"எடியே பிலத்துக் கதையாதே அவனுக்கு கேட்கப்போவுது மற்றது இண்டைக்கு எல்லோரும் உன்னைத்தான் பார்க்கினம் வீட்டைபோய் ஒருக்கா நாவூறு பார்" என்றால் தர்சி.
"சரியடி தர்சி நான் வீட்டை போறன் போற வழியிலை நடனமுருகன் மருந்துக்கடையிலை அம்மாவுக்கு குளிசையும் வாங்கவேண்டும்" என்ற மணிமொழி வீட்டைநோக்கிச் செல்லத்தொடங்கினாள்.
போற வழியிலை சனமெல்லாம் அலார்ப்பட்டார்கள். பக்கத்திலை நிண்ட ஒருத்தரை என்ன பிரச்சனை எனக்கேட்க அவர் புளியடிச் சந்தியிலை ஏதோ கலாதியாம் என்றார்.
பாதையை மாற்றிக்கொண்டு நேரகாலத்திற்க்கு மணிமொழி வீடுபோய்ச் சேர்ந்தாள்.
மைம்மல் - மாலைப்பொழுது.
மட்டுக்கட்டுதல் -அடையாளம் காணுதல்
வசந்தன் அண்ணையை மட்டுக்கட்டமுடியேல்லை என்றால் வசந்தன் அண்ணையை என்னால் அடையாளம் காணமுடியாமல் போயிற்று.
கலாதி - இரண்டு அர்த்ததில் பாவிக்கப்படும் சொல். ஒன்று அழகு இன்னொன்று சண்டை சச்சரவு
உன்ரை உடுப்பு கலாதியாக இருக்கு என்றால் உடை அழகாக இருக்கு என அர்த்தம்.
வகுப்பிலை இண்டைக்கு எனக்கும் பிரபாவுக்கும் கலாதி என்றால் எம்மிருவருக்கும் சண்டை என்ற அர்த்தம் வரும்.
வெளிக்கிடுதல் - உடை அணிதல், தயார் ஆகுதல். கலியாணப்பொம்பிளை இன்னும் வெளிக்கிடவில்லை என்றால் அவர் தயாரில்லை எனப் பொருள் படும். மாப்பிள்ளை இப்போதான் வெளிக்கிடுகிறார் என்றால் அவர் உடை அணிகின்றார் என்ற பொருள்.
கூட்டாளி - நண்பன் நண்பி(பொதுப்பால்)
உதைதல் - காலால் உதைத்தல்
அரியதரம் - சீனி அரிசி மா கலந்து செய்யும் இனிப்பு பண்டம். சிலவேளைகளில் கொஞ்சம் கல்லாக இருக்கும் கடித்தால் விழுகின்ற நிலையில் இருக்கும் பல்லு நிச்சயம் விழும்.
சக்கு - பூஞ்சணம் பிடித்தல்(பூஞ்சணம் என்பது பங்கஸ்)
இளித்தல் - அசடு வழியச் சிரித்தல்
டிமிக்கி கொடுத்தல் - ஏமாற்றுதல். டிமிக்கி எந்த மொழிச் சொல் எனத் தெரியவில்லை.
கெப்பர் - தலைக்கனம்
அம்பிடல் - பிடிபடுதல்
பிலத்து - சத்தம். பிலத்து கதையாதே என்றால் சத்தமாக கதையாதே எனப் பொருள்
மற்றது - அடுத்தது
நாவூறு - கண்ணூறு. பொதுவாக ஒருவர் கண் வைத்தால் கண்ணூறு ஏற்படும் எனவும். இன்னொருவரை புகழ்ந்து பேசினால் நாவூறு( நாக்கு+ ஊறு) ஏற்படும் எனவும் சொல்வார்கள். செத்தல் மிளகாய், உப்பு, வேப்பமிலை போன்றவற்றால் நாவூறு பார்ப்பார்கள்.
குளிசை - மாத்திரை
அலார் - அல்லோலகல்லோலப்படல்
குறிப்பு : புதிய சொற்களை அகராதி வடிவில் தராமல் கதைபோல் எழுதக்காரணம் படிக்கின்றவர்களுக்கு இலகுவாக விளங்கும் என்பதற்கேயாகும்.
"எணே அப்பு அது நான் மணியத்தாற்றை மூத்தது" என பதிலளித்தாள் மணியம் மாஸ்டர்ரை மூத்த பெட்டை மணிமொழி.
"எங்கே பிள்ளை கலாதியாக வெளிக்கிட்டுக்கொண்டுபோறாய்" கிழவன்
"என்ரை கூட்டாளிப் பிள்ளை ஒருத்திக்கு இண்டைக்கு பேர்த்டே அங்கேதான் போறன்" என்ற படி மணிமொழி சைக்கிளை உதையத்தொடங்கினாள்.
பார்ட்டியிலை மணிமொழியின் நண்பின் தாயார் அனைவரையும் நன்றாக உபசரித்தார். எல்லோருக்கும் இன்னொரு தரம் அரியதரம் சாப்பிடக்கொடுத்தார். "பிள்ளையள் இந்த அரியதரத்தை மிச்சம் விடாமல் சாப்பிடுங்கோ, இல்லையென்றால் சக்குப் பிடிச்சுப்போம்" எனக் கூறினார்.
மணிமொழி பக்கத்திலை இருந்த தன் நண்பி தர்சியைப் பார்த்து "தர்சி அங்காலை கதவுக்குப் பக்கத்திலை நிற்கிற பொடியன் என்னைப் பார்த்து இளிக்கிறான், "உவன் என்ரை கூட்டாளி ஒருத்திக்கு டிமிக்கி கொடுத்தவன்" அவனுக்கு பெரிய கெப்பர் பொடிப்பிள்ளை ஒருநாளைக்கு தனிய அம்பிடட்டும் அண்டைக்கிருக்கு உவருக்கு" என்றாள்
"எடியே பிலத்துக் கதையாதே அவனுக்கு கேட்கப்போவுது மற்றது இண்டைக்கு எல்லோரும் உன்னைத்தான் பார்க்கினம் வீட்டைபோய் ஒருக்கா நாவூறு பார்" என்றால் தர்சி.
"சரியடி தர்சி நான் வீட்டை போறன் போற வழியிலை நடனமுருகன் மருந்துக்கடையிலை அம்மாவுக்கு குளிசையும் வாங்கவேண்டும்" என்ற மணிமொழி வீட்டைநோக்கிச் செல்லத்தொடங்கினாள்.
போற வழியிலை சனமெல்லாம் அலார்ப்பட்டார்கள். பக்கத்திலை நிண்ட ஒருத்தரை என்ன பிரச்சனை எனக்கேட்க அவர் புளியடிச் சந்தியிலை ஏதோ கலாதியாம் என்றார்.
பாதையை மாற்றிக்கொண்டு நேரகாலத்திற்க்கு மணிமொழி வீடுபோய்ச் சேர்ந்தாள்.
மைம்மல் - மாலைப்பொழுது.
மட்டுக்கட்டுதல் -அடையாளம் காணுதல்
வசந்தன் அண்ணையை மட்டுக்கட்டமுடியேல்லை என்றால் வசந்தன் அண்ணையை என்னால் அடையாளம் காணமுடியாமல் போயிற்று.
கலாதி - இரண்டு அர்த்ததில் பாவிக்கப்படும் சொல். ஒன்று அழகு இன்னொன்று சண்டை சச்சரவு
உன்ரை உடுப்பு கலாதியாக இருக்கு என்றால் உடை அழகாக இருக்கு என அர்த்தம்.
வகுப்பிலை இண்டைக்கு எனக்கும் பிரபாவுக்கும் கலாதி என்றால் எம்மிருவருக்கும் சண்டை என்ற அர்த்தம் வரும்.
வெளிக்கிடுதல் - உடை அணிதல், தயார் ஆகுதல். கலியாணப்பொம்பிளை இன்னும் வெளிக்கிடவில்லை என்றால் அவர் தயாரில்லை எனப் பொருள் படும். மாப்பிள்ளை இப்போதான் வெளிக்கிடுகிறார் என்றால் அவர் உடை அணிகின்றார் என்ற பொருள்.
கூட்டாளி - நண்பன் நண்பி(பொதுப்பால்)
உதைதல் - காலால் உதைத்தல்
அரியதரம் - சீனி அரிசி மா கலந்து செய்யும் இனிப்பு பண்டம். சிலவேளைகளில் கொஞ்சம் கல்லாக இருக்கும் கடித்தால் விழுகின்ற நிலையில் இருக்கும் பல்லு நிச்சயம் விழும்.
சக்கு - பூஞ்சணம் பிடித்தல்(பூஞ்சணம் என்பது பங்கஸ்)
இளித்தல் - அசடு வழியச் சிரித்தல்
டிமிக்கி கொடுத்தல் - ஏமாற்றுதல். டிமிக்கி எந்த மொழிச் சொல் எனத் தெரியவில்லை.
கெப்பர் - தலைக்கனம்
அம்பிடல் - பிடிபடுதல்
பிலத்து - சத்தம். பிலத்து கதையாதே என்றால் சத்தமாக கதையாதே எனப் பொருள்
மற்றது - அடுத்தது
நாவூறு - கண்ணூறு. பொதுவாக ஒருவர் கண் வைத்தால் கண்ணூறு ஏற்படும் எனவும். இன்னொருவரை புகழ்ந்து பேசினால் நாவூறு( நாக்கு+ ஊறு) ஏற்படும் எனவும் சொல்வார்கள். செத்தல் மிளகாய், உப்பு, வேப்பமிலை போன்றவற்றால் நாவூறு பார்ப்பார்கள்.
குளிசை - மாத்திரை
அலார் - அல்லோலகல்லோலப்படல்
குறிப்பு : புதிய சொற்களை அகராதி வடிவில் தராமல் கதைபோல் எழுதக்காரணம் படிக்கின்றவர்களுக்கு இலகுவாக விளங்கும் என்பதற்கேயாகும்.