Author: தமிழ் மதுரம்
•8:01 PM
மிக மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் மெல்பேண் அப்புக்குட்டி என்னுடன் ஒரு ஒலிப்பதிவில் இணைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மிக மிக பிசியா, வேலைப் பளுவின் மத்தியில் ஓடியாடித் திரிந்த எங்கடை அப்புக்குட்டியைத் தேடிப் பிடித்து வந்து ஒரு குரல் பதிவினைச் செய்திருக்கிறேன்.




இது ஈழத்து முற்றம் வலைப் பதிவிற்காகச் செய்யப்பட்ட ஒரு சிறப்பு ஒலிப்பதிவு என்று கூறலாம். இந்தக் குரல் பதிவில் ஈழம் சம்பந்தமான நிறைய விடயங்களை அலசாது விட்டாலும் ஒரு சில விடயங்களை அலசியிருக்கிறோம் என்றே கூறலாம். எந்தவித ஆயத்தமும் இல்லாது திடீரென அப்புக் குட்டியைக் கண்டவுடன் செய்யப்பட்ட ஒலிப்பதிவு என்பதால் ஏற்கனவே ஈழத்து முற்றத்தில் வந்திருந்த தகவல்களும், பதிவுகளும் மீண்டும் வருகிறது என நினைக்கிறேன். அதற்காக அனைத்து வாசகர்களும் பொறுத்தருள்வீர்கள் என்று கருதுகிறேன்.




இந்தக் குரல் பதிவு பற்றிய உங்களது ஆக்க பூர்வமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம். ஒரு சில இடங்களில் ஒலித் தெளிவின்மையும் காணப்படுகின்றது. யாவரும் பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறோம்.


குரல் பதிவினைக் கேட்க..

Get this widget | Track details | eSnips Social DNA




உங்கள் ஆதரவிற்கு நன்றிகளோடு, கமல் & அப்புக் குட்டி அன்கோ.



ஈழத்து முற்றம் இன்று இருநூறு பதிவுகள் என்கின்ற இலக்கினை எட்டியிருக்கின்றதென்றால் அதற்கான பிரதான காரணகர்த்தாக்காளாக விளங்குபவர்கள் எங்களது வாசகர்கள் ஆவார்கள். வாசகர்களின் ஊக்கத்திற்கும், சளைக்காது ஈழம் சம்பந்தமான பலதரப்பட்ட பதிவுகளையும், தகவல்களையும் தேடி எடுத்துப் பதிவேற்றும் எங்கள் சக வலைப்பதிவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும், எங்களோடு கைகோர்த்துப் பயணிக்கும் ஈழத்து முற்றப் பதிவர்களுக்கும் ஈழத்து முற்றத்தின் கடைக் குட்டி எனும் வகையில் என்சார்பாகவும், ஏனைய எங்களின் அன்பு உள்ளங்கள் சார்ப்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



தொடர்ந்தும் வாங்கோ...! உங்கள் பேராதரவைத் தாங்கோ!