Author: இறக்குவானை நிர்ஷன்
•1:36 AM
நமக்கென தனியான கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, விழுமியங்கள் உண்டு. அவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

அதனை நெறியாகவும் செம்மையாகவும் செய்யும்பொருட்டும் நடைமுறை உலகோடு பொருந்தும் வகையிலும் யாழ் மண் என்ற இணையத்தளம் இன்றுமுதல் இயங்குகிறது.

இது ஒரு புதிய பரிமாணம்.



யாழ் மண்ணின் கலை,கலாசார விழுமியங்களையும் பிரத்தியேக செய்திகளையும் தனித்துவங்களையும் தாங்கி எங்களுடைய பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீரகேசரி இணையக்குழுவினருடன் இணைந்து, தூரநோக்கத்துடன் செயலாற்றக்கூடிய ஆசிரிய பீடத்தினரும் தொழில்நுட்ப வல்லுநர்களும் யாழ் மண் இணையத்தளத்தினை மெருகேற்றுகிறார்கள்.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்பேசும் மக்களுக்கு யாழ்ப்பாணம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்குவதாக யாழ் மண் அமைந்துள்ளது.

குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு இந்தச் செய்தி சந்தோசம் தருவதாக இருக்கும் என நம்புகிறோம். எப்போதோ விட்டுச்சென்ற மண்ணின் தற்போதைய நிலைவரத்தை யாழ் மண் உங்கள் கண்முன் கொண்டுவரும்.

யாழ் மண்ணுக்கு வாருங்கள். உங்கள் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லுங்கள். தேவைக்கேற்றவாறு சிறப்பாக அதனை மாற்றியமைப்பதற்கு யாழ் மண் குழுவினர் தயாராக இருக்கிறார்கள்.

-இராமானுஜம் நிர்ஷன்