Author: வர்மா
•6:52 AM
வரலாற்றுப்புகழ்மிக்க நல்லூர் தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க சிறப்பாக நடைபெற்றது.

பட உதவி;பிரியா
Author: கானா பிரபா
•7:47 PM

இத்தனை நாளும் எதிர்ப்பார்த்த நாள் இன்று நல்லைக் கந்தன் ரதமேறி வரும் நாள். எம்பெருமானின் அருள் வேண்டிப் பக்தர்கள் தவம் கிடக்க, வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.




அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பு நிகழ்ச்சியில் சைவத்தொண்டர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், நல்லைக் கந்தன் பாடல்கள், நேயர்களின் நேரடிக் கருத்துப் பரிமாறல்கள், அத்தோடு நல்லைக் கந்தன் ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல் போன்ற அம்சங்கள் அரங்கேறியிருக்கின்றன

இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், கடந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வுகளில் இருந்து இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.




முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு
Get this widget
Share
Track details



ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது
Get this widget
Share
Track details


எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய "முருக வழிபாட்டின் சிறப்பு"
க்குறித்த கருத்துப் பகிர்வு

Get this widget
Share
Track details



முன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கிய "நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்" குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு


அல்லது இங்கே சொடுக்கவும்

தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய "தேர்த் திருவிழாவின் சிறப்பு" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு


அல்லது இங்கே சொடுக்கவும்

அகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் "நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்" என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு


அல்லது இங்கே சொடுக்கவும்







நன்றி: இந்தப் பெரும் பணிக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும்

படங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப் பிள்ளை
Lanka Library, மற்றும் கெளமாரம் தளம்
Author: வர்மா
•10:07 AM
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் புஷ்கரணியில் தீர்த்தமாடிய அற்புதமான காட்சி






















பட உதவி; பிரியா
Author: சினேகிதி
•7:57 AM
கனடால இப்ப கோடை காலம். நேற்று கொஞ்ச நேரம் எங்கட தோட்டத்தில போய் நிண்டனான் அப்ப அங்க நிக்கிற pears மரம் மற்று அம்மா பராமரிக்கிற கொஞ்சம் வெங்காயம் கொஞ்சம் தக்காளி கொஞ்சம் பாவற்காய் கொஞ்சம் பச்சை மிளகாய் கொஞ்சம் கத்தரி கொஞ்சம் வெண்டிக்காய் இப்பிடி எல்லா மரங்களையும் பாத்துக்கொண்டு நிக்கேக்க எனக்கு 13 வருசத்துக்கு முதல் ஊரில எங்கட வீட்டில நின்ற மரங்கள் அந்த மரங்களோடு எனக்கிருந்த தொடர்பும் ஞாபகத்து வந்திச்சு.கனநாள ஈழத்து முற்றத்துக்கு வரேல்லத்தானே நான் அதான் இன்டைக்கு
எப்பிடியும் கதை சொல்ற என்டு முடிவெடுத்திட்டன்.



நான் சொல்லப்போற மரங்களில் எத்தினை இப்ப உயிரோட இருக்கெண்டு எனக்குத் தெரியாது.டக்கெண்டு இப்ப ஞாபகத்துக்கு வாறது எங்கட வீட்டு வாசல்ல ஒரு குட்டிப்பந்தல் இருக்கு அதில எப்ப படர்ந்து பூத்திருக்கிறது சின்ன சிவப்பு நிற ரோசாப்பூ.அதோட சேர்த்து மஞ்சள் நிற கோண் பூ. உண்மையா இதுக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியாது. இந்த இரண்டு பூக்களும் சேர்ந்து எங்கட வீட்டு மதிலோட படர்ந்திருக்கும். கேற்றில நிண்டு ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டு இந்த மஞ்சள் பூவின் மொட்டை ஆய்ஞ்சு நெத்தில அடிச்சா டொக் டொக் என்டொரு சத்தம் வரும். அப்பிடி விளையாடுறதுக்காக நிறைய மொட்டுகளை அநிநாயமாக்கியிருக்கிறம் நானும் எங்கட gang ம். ஒரு நாள் அப்பிடி மெய்மறந்து மொட்டடிச்சு விளையாடிக்கொண்டிருக்கும்போது கால் சின்ன விரல் மதிலுக்கும் gate க்குள்ளும் போய்ட்டுது. போய் நசிபட்டு நிகம் சப்பளிஞ்சு போய் ரத்தமெல்லாம் வந்திச்சு ( இந்த இடத்தில நீங்க உச்சு கொட்டோணும். சரியா). இன்று வரைக்கும் அந்த நிகம் கிளிச்சொண்டு மாதிரி வளைஞ்சு ஒரு மாதிரித்தான் இருக்கு :) :(..

இந்தக் கொடிக்குப் பக்கத்தில ஒரு மரம் நிண்டது. அது கிறிஸ்மஸ் மரம் மாதிரியிருக்கும் கிட்டத்தட்ட. கிறிஸ்மஸ் சேப்லதான் வளரும். கேற்றன் 2 பக்கமும் நின்றது. எங்கட வீட்டின் அடையாளம் அந்த மரங்கள். மற்ற மரங்களோடு ஒப்பிடும்போது இந்த மரங்கள் நல்ல strong அதால நாங்கள் கயிறு கட்டிட்டு பாய்ஞ்சு விளைாயாட இந்த மரங்கள் அநேகம் உதவி செய்யும். அடிவேண்டேக்க சுத்தி சுத்தி ஓடுறதும் இந்த மரத்தைச் சுத்தித்தான்.

இதுக்குப் பக்த்தில நீட்டுக்கு 4 தென்னை மரம் நிண்டது. எங்கட வீடு நடுவில முன் பக்கமும் பின் பக்கமும் மரங்கள். முன் பக்கம் 3 தென்னை மரம். 2 பச்சைத் தேங்காய் மரம் 1 செவ்விளநீர் மரம். அது கொஞ்சம் உயரம் என்டதால எனக்குப் பெரிசா தென்னை மரத்தோட ஒத்துவாறதில்ல. ஆனால் அந்த மரங்களைப் பார்த்துத்தான் அம்மம்மா காவோலை விளக் குருத்தோலை சிரிக்கிற கதை சொல்லித்தந்தவா. இதில வந்த இளநீர் அநேகமாக் கோயிலுகு்குத்தான் போயிருக்கெண்டு நினைக்கிறன் ஏனென்டால் எனக்கு எங்கட வீட்டு இளநீ குடிச்ச ஞாபகம் இல்லை. வேற ஆக்கள் வீட்ட வழுக்கல் சாப்பிட்ட ஞாபகங்கள் நல்லாவே இருக்கு.

தென்னை மரங்களுக்கு நடுவில ஒரு தேசி மரம் இருந்தது. பெரிய உயரமில்லை. வட்டமா நிலத்தோட முட்டுற மாதிரி வளர்ந்திருந்தது. எனக்கு இந்த மரத்தில ஒரு தனி விருப்பமிருந்தது. தேசி இலையின் வாசம் நல்லாப்பிடிக்கும். நிலத்தில முட்டுற காய்ஞ்சு போன தேசித் தடிகளை முறிச்சு மரத்துக்கு கீழ அமைதியா நிழல்ல இருந்து சட்டி பானை எல்லாம் வச்சு சோறு கறி காய்ச்சினது அங்கதான். சில நேரம் நல்ல மஞ்சள் நிறத்தில தேசிப்பழம் விழிந்திருக்கும். அம்மா விடிய வெள்ளென தேசிப்பழம் விழுந்திருக்கா என்று பார்த்து எடுத்துக்கொண்டு வரச்சொல்லி என்னைத்தான் அனுப்புவா.2 நாளைக்கு முதல் மகான் என்ற தொடர் பார்த்தன் விஜய் ரீவில.அதில குட்டி பரமஹம்ஸர் சொல்லுவார் தான் மல்லிகைப் பூச் செடியோட கதைச்சனான் அதான் மரம் எனக்கு நிறையப் பூ தந்ததென்று. அது உண்மை என்டால் எங்கட தேசி மரம் நல்லாக் காய்ச்சதுக்கு நான் தானுங்கோ காரணம். எங்கட கோழியும் சில நேரம் காரணமா இருக்கலாம். ஏனென்டால் அவாவும் தேசி மரத்துக்கு கீழ வந்துதான் முட்டை போடுறவா.

மற்ற மதில் கரையில ஒரு பப்பாசி மரம் நின்டது. நல்ல ஒரேஞ் நிறப்பழம். நினைக்கவே வாயூறூது. அப்பிடியொரு இனிப்பு அந்தப் பப்பாசிப்பழம். கனடால இருக்கிற பப்பாசிப்ழம் ஊசி போட்டுப் பழுக்க வைக்கிறதாலயோ என்னவோ இனிப்பே இல்லை. எங்கட வீட்டுப் பப்பாசிப்பழத்துக்கு நல்ல கிராக்கி. எங்கட பெரியப்பாக்கு 6 பிள்ளையள். வீட்ட வாறநேரம் தன்ர வீட்ட கொண்டுபோறன் என்டு பப்பாசிப்பழம் ஆய்ஞ்சுகொண்டுபோய் ஆருக்கும் வித்துப்போட்டு அந்தக்காசோட ஆள் கள்ளுத்தவறணைக்குப் போயிடும். பிறகு நாங்கள் ரியூசனுக்குப்போகேக்க பெரியம்மா என்னடி ஒரு பப்பாசிப்பழம் கொண்டுவரேல்ல இந்த முறை. அரிசிப்புட்டோட சாப்பிட நல்லாயிருக்கும் என்டுவா அப்பத்தான் தெரியும் பெரியப்பான்ர வண்டவாளம்.

கொய்யா மரம் நிண்டது. ஆகச்சின்னனில எனக்கும் அக்காக்கும் கிரந்தி அதால அம்மா கொய்யாப்பழம் சாப்பிட விடுறேல்ல ஆனால் நாங்கள் களவா மரத்தில வச்சே கடிச்சிருக்கிறம். லக்ஸ்பிறே பாக் கட்டி அது வெடிக்கிற அளவுக்குப் பெருசா வரும். அப்புறம் மாதுளம் பழம். அது நான் நட்ட மரம். காய்ச்சல் வாற நேரமெல்லாம் நேக்ரோ குடிச்சிட்டு சத்தி எடுத்ததும் அந்த மரத்துக்குக் கீழதான். (opps). மாதுளம் பழம் பழுக்க முதல் வெள்ளையா இருக்கேக்க பிஞ்சுக்காய் சாப்பிட நல்லாயிருக்கும். பழம் இன்னும் நல்லாயிருக்கும்.

மே பிளவர் என்றொரு மரமும் நின்றது. இளநாவல் நிறத்தில கொத்து கொத்தாப் பூக்கும் அந்தப்பூ. மே-யூன் காலத்தில் மட்டும்தான் அந்தப்பூ பூக்கும். அதற்குப்பக்கத்தில் சில குறோட்டன்கள் எக்ஸோறா மற்றும் நாலுமணிப்பூ நிண்டவை. நாலுமணிப்பூ நிறைய நிறத்தில நிண்டது. மஞ்சள்தான் நிறைய நிண்டது.



வீட்டுக்குப்பின்னால மதில் கரையோட ஒரு அரலி மரம் (நாவல் நிறம்) ஒரு நெல்லி மரம் ஒரு தென்னை மரம் ஒரு பப்பாசி நிறைய செவ்வரத்தை மரங்கள் நின்றன. செவ்வரத்தம் பூவின் அம்மா யூஸ் செய்து தருவா. சுடுதண்ணில பூப்போட்டுத் தங்கச்சி குளிக்க வாக்கிறது. பிறகு அப்பிடியே ஆசையில நாங்களும் செவ்வரத்தப்பூவால் நனைந்த தண்ணில குளிக்கிறது...ம் இப்பிடியோ எவ்வளவோ ஞாபகம் வருது. அடிக்கிறதுக்கு கூட அம்மா முதல் முறிக்கிறது செவ்வரத்தம் தடிதான. நிறைய திட்டு திட்டா இருக்கும் அந்தத் தடில அடி பட்டால் சும்மா அந்த மாதிரி சுணைக்கும்.

இந்த மரங்களைப் பற்றி எழுதும்போது வேறு பல ஞாபகங்களும் கூடவே ஞாபகம் வருகிறது.

மீண்டும் வருகிறேன்.
Author: வர்மா
•8:34 PM
வரலலாற்றுப்பெருமைமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயதீர்த்தோற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.































பட உதவி; பிரியா






Author: வர்மா
•3:27 AM
வரலாற்றுப்புகழ்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமிஆலய தேர்த்திருவிழா இன்று சிற்ப்பாக நடைபெற்றது










பட உதவி; பிரியா

Author: வடலியூரான்
•3:00 AM
இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.



எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.



அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.




நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.



வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.



யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.



கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.



பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.



ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது