Author: வந்தியத்தேவன்
•4:54 AM
இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி குடும்பத்தின் இன்னொரு வெளியீடான இளைஞர்களினால் அதிகம் படிக்கப்படும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் எங்கட ஈழத்துமுற்றம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 21.07.2009 செவ்வாய்க்கிழமை மெட்ரோ நியூசில் இந்ததகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தங்கள் தினசரியில் தினமும் ஒரு இணையம் பற்றிய தகவல்களைச் சுருங்கத் தருகிறார்கள். அந்த வகையில் ஈழத்துமுற்றம் பற்றிய சிறிய தகவல் வெளியாகியுள்ளது.



கடந்தமாதம் உருவாகி தவழ்ந்து இன்றைய சினேகிதியின் வண்டவாளங்கள் மூலம் 50 பதிவுகளைத் தொட்ட எங்கட முற்றம் இந்த தகவலின் மூலம் இன்னும் சிலரைச் சென்றடையக்கூடும்.

ஈழத்துமுற்றம் சொந்தக்காரர்கள் சார்பாக மெட்ரோ நியூசுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சொந்தக்காரர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்:
கிட்டத்தட்ட 50 சொந்தக்காரர்கள் இருந்தும் இதுவரை ஒரு சிலரே முற்றத்தில் பதிவு செய்துள்ளார்கள். பலர் பின்னூட்டங்கள் இட்டாலும் அவர்களிடமிருந்து காத்திரமான பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.
This entry was posted on 4:54 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On July 22, 2009 at 5:10 AM , கானா பிரபா said...

வணக்கம் வந்தி

உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதுவரை 48 ஈழ உறவுகள் இணைந்திருக்கும் இத்தளத்தில் அனைவரும் பூரண பங்களிப்பை வழங்க வேண்டும். மெட்ரோ நியூஸ் பத்திரிகைக்கு மிக்க நன்றி

 
On July 22, 2009 at 5:22 AM , யசோதா.பத்மநாதன் said...

தகவலுக்கு நன்றி வந்தி.

இந்த ஒரு மாதக் குழந்தை மீது நீங்கள் காட்டும் ஆர்வம் போற்றுதற்குரியது.

 
On July 22, 2009 at 6:25 AM , M.Rishan Shareef said...

மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். இச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட நண்பர் வந்தியத்தேவனுக்கு நன்றிக்கும் மெட்ரோ நியூஸ்க்கும் நன்றி !

 
On July 22, 2009 at 9:25 AM , மொழிவளன் said...

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

மெட்ரோ நியூஸ் பத்திரிக்கைக்கும், அது வெளியிட்ட செய்தியை எமக்கு அறியத் தந்த வந்திக்கும் மிக்க நன்றி

 
On July 22, 2009 at 11:52 PM , geevanathy said...

உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பனே...

 
On July 24, 2009 at 8:33 AM , வலசு - வேலணை said...

:-))

 
On July 25, 2009 at 8:33 AM , சினேகிதி said...

அதானே இவ்வளவு பேர் இருக்கிறம் ஆனால் எழுதுறதென்னவே கொஞ்சப்பேர் தான்..மிச்சாக்கள் எல்லாம் என்ன மூக்குமுட்டச் சாப்பிட்டு நித்திரையா?

வந்தெழுதுங்கோ எல்லாரும்..அப்பத்தான் உருப்படியா ஒரு அகராதி மாதிரித் தெரியும்.