Author: வந்தியத்தேவன்
•10:08 AM
இன்றி ஆடிப்பிறப்பு. ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும். ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் "ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே" என்ற பாடலும் தான்.

ஆடிப்பிறப்பிற்க்கு வீடுகளில் இனிப்புக்கூழ் காய்ச்சுவார்கள். தூயாவின்ட குசினிக்கை இதன் செய்முறை இருக்கு. கொழுக்கட்டை அவிப்பார்கள். ஆடிகூழும் ஆடிக்கொழுக்கட்டையும் அவ்வளவு பேமஸ். தை மாதம் பிறப்பை தைப்பொங்கலாக கொண்டாடுகின்றோம், சித்திரை மாதப் பிறப்பை சித்திரைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றோம். ஆனால் ஆடிப்பிறப்பை ஏன் கொண்டாடுகின்றோம் என்ற கதை எனக்கு இன்னமும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லவும். ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை ஆடிமாதத்தில் எந்த நல்லகாரியத்தையும் தொடங்கமாட்டார்கள். இந்தியாவில் இளம்ஜோடிகளை பிரித்துவைத்துவிடுவார்கள். எங்கட நாட்டிலை அந்தக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யமாட்டார்கள்.



ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் புழக்கத்தில் இருக்கு. இதன் அர்த்தம் ஆடியிலை விதை விதைத்தால் விளைச்சல் அதிகம் என்பதாகும். இப்படி ஆடி என்ற சொல் எம்மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருந்தாலும் பின்னாளில் ஆடி என்றால் ஆடிக்கலவரமே முதலில் ஞாபகத்திற்க்கு வரும். ஆகவே தற்கால ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியாகவும் ஆடி முக்கியம் பெறுகின்றது.



இவற்றைவிட ஆடியில் நல்லூர், கதிர்காமம் உட்பட பல கோயில்களில் திருவிழா தொடங்கும்.

ஆடி அமாவாசை

ஒவ்வொருமாதமும் அமாவாசை வந்தாலும் ஆடிமாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு தனிச் சிறப்பு. பெரும்பாலான இந்துக்கள் தங்கள் முன்னோருக்கு பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆடி அமாவாசையாகும்.

எங்கள் முன்னோர்களான பிதிர்களை வழிபட்டால் தோசங்கள் நீங்கி நல் வாழ்வு பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்தில் கீரிமலை நகுலேஸ்வரம், மட்டக்களப்பில் அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயில், திருகோணமலையில் கோணேசர் கோயில் தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்தமாடி மக்கள் தங்கள் பிதிர்களுக்கு நன்றி செலுத்துவதுடன் பாவவிமோசனமும் அடைகின்றார்கள் என்பது ஐதீகம்.

இன்று (17.07.2010) ஆடிப் பிறப்பு , (09.08.2010) ஆடி அமாவாசை.

இது ஒரு மீள்பதிவு.
படங்கள் உதவி இணையம்
This entry was posted on 10:08 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: