•6:47 AM
அச்சமென்பதுமடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா,வேப்பமர உச்சியிலிருந்து பேயொன்று ஆடுதென்று போன்ற பாடல்களீன் மூலம் பயம் என்பது என்னவென்றேதெரியாது. சன்னதிகோயில் கொடியேறினால் 15 நாளும் சன்னதியில்தான்.சன்னதியானின்ரை சாப்பாட்டை தவறவிமாட்டம்.கோயிலிலை நிப்பம் திடீரென யாழ்ப்பாணம் போய் படம் பாப்பம். சிலவேளை அச்சுவேலி தியேட்டரிலை படம் பாப்பம்.பள்ளிக்கூடத்திலை படிக்கேக்கை தேர் தீத்தத்துக்கு ஸ்கவுட்சா ஒழுங்காகக்கடமை செய்தனாங்கள்.
ஒருநாள் இரவு நெல்லியடி தியேட்டரிலை இரவு 9.30 மணீக்கு நெஞ்சம்மறப்பதில்லை படம்பாத்துவிட்டு நடந்து சன்னதிக்குப்போனம்.மறுபிறவி பற்றிய கதை.புறாப்பொறுக்கிதாண்டி வல்லை வெளீக்குப்போனதும்தூரத்திலை ஏதோவெளீச்சம் தெரிஞ்சுது. அய்யோ பேய் எண்டு ஒருவன்கத்தின்னான் அவ்வளவுதான்.ஆளுக்கொருபக்கமா வயல் வெளீககை ஓடத்தொடங்கினம்.ஒவ்வொருத்தரா சன்னதிக்குப் போய்ச்சேந்தம்.
சிவராத்திரியிலண்டு பருத்தித்துறை தியேட்டரிலை கெளரவம் படம் பாக்கிறதுக்கு திட்டம் போட்டம். அல்வாய் சாமணந்தறை சுடலைக்கு கிட்டப்போனதும் பெரியப்பா சுகமாக இருக்கிறியளா எனக்கேட்டபடி ஒருவன் சைக்கிளை சுடலைக்குள்ளைவிட்டான். போனவாரம்தான் அவனுடைய பெரியப்பா செத்தவர்.அதைக்கண்டு உசாரான ஒன்னொருவன் செத்துப்போன தன்னுடைய மாமாவைக்கூப்பிட்டுக்கொண்டு சுடலைக்குள் ஓடினான்.மோகன் மட்டும் தோடுடையசெவியன் எனத்தேவாரம் பாடியபடி பின்னால் ஓடிவந்தான்.
தியேட்டருக்குப்போனதும் படம்முடிய அரை மனித்தியாலம் இருக்கு என்றார்கள். அந்தக்காலத்திலை படத்தின் வசனத்தையும் பாட்டுக்களையும் வெளீயே போடுவார்கள். வசந்தமாளீகையின்கதை வசனம் இப்பவும் மனப்பாடம். மறு நாள்காலையில் மோகனத்தேடிப்போனேன்.சுகமில்லாமல்மந்திகையில் சேத்திருக்கு எண்டு தகப்பன் கூறினார்விளையாட்டு விபரீதமானதை உணர்ந்தேன்.
பாடசாலை விடுமுறைக்கு வவுனியாவுக்குப்போனேன்.உறவினர்கள் கடை வைத்திருந்தார்கள்.பெரியம்மாவின் மகன் ஒருவர் வவுனியாவில் விவசாய அதிகாரியாகக்கடமையாற்றினார்.சிலவேளைகளீல்அவருடன் பண்ணைகளுக்குப்போவேன். ஆற்றில் குளத்தில் குளீப்பது, மீன்பிடிப்பதுஎல்லாம் வித்தியாசமானஅனுபவம்.
பண்ணையொன்றில் இரவு நான்படுப்பதற்கு ஆயத்தமானபோது தம்பி உதிலை படுக்காதையுங்கோ கொஞ்சம் தள்ளீப்படுங்கோ என்று ஒருவர்கூறினார். ஏன் என்று கேட்டேன். காரணம் சொல்லாமல் வேறிடத்தில் படுக்கும்படி கூறினார். அந்த இடத்தில்தான் படுப்பேன் என்று நான் உறுதியாகக்கூறினேன்.
அந்த இடத்தில் படுத்தால் அமுக்குப்பேய்பிடிக்கும் என்றார்கள்.பேயைப்பார்கக ஆசைப்பட்டதால் அந்த இடத்தில் படுத்தேன். பேயைப்பார்க்கிற ஆர்வத்தில் கனநேரம் நித்திரை வரவில்லை.என்னை அறியாமல் உறங்கிவிட்டேன்.யாரோ அமுக்குவதுபோலிருந்தது. எழும்பமுயற்சித்தேன்.முடியவில்லை.சத்தம்போட்டேன்.சத்தம்வெளியேவரவில்லைதிடீரென எழும்பி இருந்தேன்.பின்னர்படுத்துவிட்டேன்.விடிந்த்தும் யாரிடமும் இரவு நடந்ததைச் சொல்லவில்லை.
கல்மடு பண்ணயில் ஒரு நாள் இரவு தங்கினேன். தூரத்தில் ஒருவெளிச்சம் தெரிந்தது. அது என்னவென்று கேட்டேன்... தெரியாது.எப்பவாவது ஒருநாள்தான் தெரியும்.கிட்டப்போனால். மறைந்துவிடுமென்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. பார்த்துவிடுவதென்று முடிவெடுத்தேன். வெளிச்சத்தை நோக்கிச்சென்றேன். கிட்டப்போகப்போக அதனுடையதூரம் குறையவில்லை. நான்வேகமாகச்சென்றேன். அதுவும் வேகமாகச்சென்றது.காட்டுக்குள் அதுமறைந்துவிட்டது. நான் திரும்பிவந்துவிட்டேன்.அந்தவெளிச்சத்தைப்பார்த்து யானையே பயந்ததாம்.
ஊரில் ஒரு வீட்டில் வீடியோ பார்த்தோம்.நள்ளிரவு தாண்டியபோது படத்திலே அனைவரும் ஒன்றிணைந்திருந்தபோது வெளியேபடுத்திருந்த நாய் பயங்கரமாகச்சத்தமிட்டுக்கொண்டு வீட்டுக்குள் ஓடியது. துணிவுள்ள சிலர் எனனவென்றுபார்க்க வெளியே ஓடினார்கள்.
அப்போது வீட்டில் இருந்த98 வயதான ஆச்சி பொடியள் வெளீயே போகாதேங்கோ என்றார்.
அவர் சொல்லிவாய்மூடவில்லை தூரத்தில் ஒப்பாரிச்சத்தம் கேட்டது.அந்தவீட்டிலே சுகமில்லாமல் இருந்த ஒருவர் இறந்துவிட்டார் என அறிந்தோம்.
சுமார் 25 வ்ருடங்களூகு முன்நடந்த இச்சம்பவங்களை நினைத்தால் இன்றைக்கும் அதிசயமாக உள்ளது.
ஒப்பாரி,,,,,,,,,,,,,,,,,, இறந்தவரின் புகழையும் சிறப்பையும் கூறி அழுவது.